மீனாவுக்கு ஞானம் முளைத்து விட்டது, பல்லில். பல் டாக்டர் மரத்துப் போவதற்கான ஊசியை எகிறில் போட்டு விட்டு ஞானப்பல்லைப் பிடுங்கி விட்டார். ஞானம் போன கடுப்போ அல்லது பல்லே இல்லாத உணர்ச்சியோ தெரியாது, பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து செல்கையிலேயே முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்று மீனா என்னிடம்…
“ழேய், பஸ்ழ ஏழினதும் ழெண்டு அழுவது ஷிகெஷ்ட் வாங்ழு, ஷழியா?”
“ஹாங், என்ன?”
“ஷிகெஷ்ட் ழா, ஷிகெஷ்ட், பஷ்ல”
“ஹோய், என்ன ழ ழங்கற?”
“ஷும்பா, பேஷ முழியலழா!”
“அப்ப பேசாம வாயேன்”
“ழேய், ஷிகெஷ்ட் வாங்க ஷொல்ழேண்ழா! பஷ்ழ மானஷ்ஷ வாங்காஷே”
“ஒண்ணும் புரியலை எனக்கு” (பஸ்ல ஏறினதும் பேசாம காசைக் கையில காமிச்சுக் கண்டக்டர் பக்கம் கையை காட்டினா குரங்கு கூட டிக்கெட் வாங்கிண்டு வந்துடும். அத வுட்டுட்டு எதுடா சாக்குன்னு இருக்கறவண்ட இப்படியெல்லாம் சொன்னா?!)
பஸ்ஸில் ஏறி அது கிளம்ப இருக்கையில் சுரணையே இல்லாத என்னிடம் மீனா….
“ம்ம்” – கையை நீட்டுகிறார்.
“என்ன?”
கண்ணில் கோபக் கனல் தெரிய, மறுபடியும், “ம்ம்” – கையில் சில்லறை, டிக்கெட்டுக்குத் தான்…ஆனா நம்ம சுழி?
“என்னது? எனக்கா?”
“ழேய், ம்!” கையை கண்டக்டரை நோக்கி லேசாக நீட்டுகிறார். அவர் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.
“அவரைக் கூப்பிடணுமா?”
“ழேய்…! ஷிக்கெஷ்ட் ழா!”
“என்னது?
“ஷும்பக் கஷங்காழா…ஷிக்கெஷ்ட் ஷிக்கெஷ்ட்”
நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு….”மீனா, என்ன சொல்றேன்னே புரியலை…”
“மெண்ணிய ஷிருகிப்பிடிவேழ்ன்…கண்ஷக்ஷர் கிட்ட ஷிக்கெஷ்ட் வாங்கு
மஷியாதையா…!”
“ஓ டிக்கெட்டா…?”
தலையை ஆட்டுகிறார், பிரளய கால சிவன் போல இருந்தது முகம்.
“சரி. ஸ்டாப் பேரு என்ன சொல்ல?”
“ஷண்ணி ஷொச்ஷி”
“என்னது? மீனா, அப்டில்லாம் ஸ்டாப்பே கிடையாதே?” – என் முகத்தில் லேசாக சிரிப்பு தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில மீனாவும் லேசாக சிரிக்க ஆரம்பித்திருந்தார்.
“ஷும்பா, வாங்குழா…”
“ஸ்டாப் பேரு சொல்லு, அப்பத்தான் வாங்க முடியும்.”
“ஷண்ணி ஷொட்ஷி” – (தண்ணீர் தொட்டி என்று ஒரு பஸ் ஸ்டாப் உண்டு,
ஆரப்பாளையத்திற்கு முந்தையது)
“தண்ணித் தொட்டியா? இத ஒழுங்கா சொல்ல மாட்டியா?”
“ஒன் தழை! வாங்ழுகு”
“எவ்வளவு டிக்கெட்?”
“அழுவது அழுவது ஒண்ழு இழுவது”
“என்னது அழுகை வறதா? பல்லு ரொம்ப வலிக்கறதா?”
“ழேய், பஷ்னு பாக்கறேன், இழ்ழ!!!!”
“மீனா, டிக்கெட் எவ்வளவுன்னு தெரியாதே சொல்லேன்.”
“அழுவது ழா, ழெண்டு அழுவது, அஷான் ஒண்ழு இழுவது”
“ஒண்ணு இருவது, ரெண்டு அறுவது பைசா டிக்கெட்டா?”
“ழீ நாஷமா போனது, அழ்தான், போ வாழ்ங்கு!”
டிக்கெட்டை வாங்கி வந்து அவரிடம் கொடுத்து விட்டு நான் சிரி சிரியென்று சிரித்தேன். அவர் ஷிழி ஷிழியென்று ஷிழித்தார்! வீட்டிற்கு வந்து ஜானகி பாட்டியிடம்…
“கழங்காழன் பஷ்ல என் ப்ழாணன வாங்கழான் வேணூம்ழ்னே, ஷிக்கெஷ்ட்
வாழ்ங்குண்ணா ஒண்ழும் புழியாத மாட்றி ஆக்க்ஷ்ட் பண்ழான்மா!”
“நீ இப்டி பேசிண்டேவா வந்தே இதுங்கூட, சரித்தான்!”
*